காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாடாளுமன்றத்தில் தடுக்கப்பட்டேன்: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக எம்.பி. கடிதம்

நாடாளுமன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களால் தடுக்கப்பட்டது குறித்து தமிழக எம்.பி. கடிதம்

News image
Updated On :19 ஜூன் 2024, 10:12 am

DIN

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா, நாடாளுமன்றத்துக்கு தான் வந்தபோது, மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர்களால் தடுக்கப்பட்டு, எங்குச் செல்ல வேண்டும் என கேட்கப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், நாடாளுமன்றத்துக்கு தான் வந்த போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொழிற்பாதுகாப்புப் படை வீரர்கள் தன்னை தடுத்து நிறுத்தி, நாடாளுமன்றத்துக்கு வந்த காரணம் என்ன என்பதைக் கேட்டதாகவும், இதற்கு முன்பு இதுபோன்றதொரு சம்பவம் நடந்ததில்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Story image

நாடாளுமன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களால் தான் தடுத்து நிறுத்தப்பட்டு, கேள்வி கேட்கப்பட்ட சம்பவத்தை தன்னதால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றும் இந்த சம்பவம் தன்னை வெகுவாக பாதித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு எந்த அலுவல் இல்லாத நேரத்திலும் செல்லலாம் என்று தான் நம்பியிருந்ததாகவும், தான் நாடாளுமன்றத்துக்கு வந்த காரணத்தை அவைத் தலைவருக்குத்தான் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்ட மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த மே மாதத்தில் இருந்து, நாடாளுமன்ற பாதுகாப்புச் சேவையிடமிருந்து, மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் வசம் நாடாளுமன்ற பாதுகாப்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இரண்டு பேர் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து, பார்வையாளர் மாடத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த இடத்துக்குள் குதித்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பாதுகாப்பு பொறுப்பு சிஐஎஸ்எஃப் வசம் சென்றது.

தற்போது சிஐஎஸ்எஃப் தான் நாடாளுமன்றத்தின் புதிய மற்றும் பழைய கட்டடங்களின் பாதுகாப்பு பொறுப்பை மேற்கொண்டுள்ளன.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில், நாடாளுமன்ற பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.