40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து காவல்துறையினர் அழித்துள்ளனர்.

News image

சோதனையில் கைப்பற்றப்பட்ட குக்கர்கள் - ANI

Updated On :6 மே 2024, 3:57 pm IST

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திந்த 9 வெடிகுண்டுகளை போலீசார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.

இதுகுறித்து கட்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,

“திபகட் பகுதியில் வெடி மருந்து பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் 2 வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுக்களின் உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினோம்.

மக்களவைத் தேர்தலை சீர்குழைக்கும் நோக்கில் திட்டமிட்டு மாவோயிஸ்ட்டுகள் அப்பகுதியில் வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து 9 ஐஇடி வகை வெடிகுண்டுகள், 6 குக்கர்கள், வெடிமருந்து பை மற்றும் டெட்டனெட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், அந்த வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.