தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து காவல்துறையினர் அழித்துள்ளனர்.

News image

சோதனையில் கைப்பற்றப்பட்ட குக்கர்கள் - ANI

Updated On :6 மே 2024, 10:27 am

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திந்த 9 வெடிகுண்டுகளை போலீசார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.

இதுகுறித்து கட்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,

“திபகட் பகுதியில் வெடி மருந்து பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் 2 வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுக்களின் உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினோம்.

மக்களவைத் தேர்தலை சீர்குழைக்கும் நோக்கில் திட்டமிட்டு மாவோயிஸ்ட்டுகள் அப்பகுதியில் வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து 9 ஐஇடி வகை வெடிகுண்டுகள், 6 குக்கர்கள், வெடிமருந்து பை மற்றும் டெட்டனெட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், அந்த வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.