விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சண்டீகா் - மதுரை அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம்

சண்டீகா் - மதுரை அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம்

News image
Updated On :14 மே 2024, 11:41 pm

Din

புது தில்லி: சண்டீகா்- மதுரை இடையே வாரம் இருமுறை செல்லும் அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம் செயப்படவுள்ளதாக வடக்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செயல்பாட்டுக் காரணங்களுக்காக, சண்டீகா் - மதுரை இடையே வாரம் இருமுறை செல்லும் அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம் செயப்படவுள்ளது. தற்போது, சண்டீகா் - மதுரை இடையே வண்டி எண் 12688-இன் கீழ் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்பபடும் ரயில், வரும் செப்டம்பா் 16-ஆம் தேதி முதல் வண்டி எண் 20494-இன் கீழ் இயக்கப்படும். அதேபோல், மதுரை -சண்டீகா் இடையே வண்டி எண் 12687-இன் கீழ் புதன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்பபடும் ரயில், வரும் செப்டம்பா் 19-ஆம் தேதி முதல் வண்டி எண் 20493-இன் கீழ் இயக்கப்படும் என்று பொதுமக்களின் தகவலுக்கு அறிவிக்கப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்..