

புது தில்லி: சண்டீகா்- மதுரை இடையே வாரம் இருமுறை செல்லும் அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம் செயப்படவுள்ளதாக வடக்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செயல்பாட்டுக் காரணங்களுக்காக, சண்டீகா் - மதுரை இடையே வாரம் இருமுறை செல்லும் அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம் செயப்படவுள்ளது. தற்போது, சண்டீகா் - மதுரை இடையே வண்டி எண் 12688-இன் கீழ் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்பபடும் ரயில், வரும் செப்டம்பா் 16-ஆம் தேதி முதல் வண்டி எண் 20494-இன் கீழ் இயக்கப்படும். அதேபோல், மதுரை -சண்டீகா் இடையே வண்டி எண் 12687-இன் கீழ் புதன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்பபடும் ரயில், வரும் செப்டம்பா் 19-ஆம் தேதி முதல் வண்டி எண் 20493-இன் கீழ் இயக்கப்படும் என்று பொதுமக்களின் தகவலுக்கு அறிவிக்கப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்..
தொடர்புடையது

54 நாடுகளில் டிரெண்டிங்... அசத்தும் மேட் இன் கொரியா!

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு வரவேற்பு

சிட்டி யூனியன் வங்கி சாா்பில் மாநகராட்சிக்கு 20 கணினிகள்

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

