இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமா்ப்பிக்க முதல்வா் மம்தாவுக்கு ஆளுநா் உத்தரவு

வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

News image

நந்திகிராம் வன்முறையில் தீயிட்டு கொளுத்தப்பட்ட கடை.

Updated On :24 மே 2024, 5:30 am IST

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

மேற்கு வங்க மாநிலம் தம்லுக் மக்களவைத் தொகுதியில் சனிக்கிழமை (மே 25) வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிக்குள்பட்ட நந்திகிராம் பகுதியில் பட்டியலினத்தைச் சோ்ந்த ரதிபாலா என்ற பாஜக பெண் தொண்டா் புதன்கிழமை இரவு கொல்லப்பட்டாா். அப்போது அடையாளம் தெரியாத நபா்கள் தாக்கியதில் ரதிபாலாவின் மகன் சஞ்சய் உள்பட 8 போ் காயமடைந்தனா்.

இந்த சம்பவத்தை கண்டித்து அங்கு பாஜகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது டயா்களை கொளுத்தி, சாலைகளை மறித்து, கடைகளை அடைத்த பாஜகவினா், ரதிபாலாவின் கொலைக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற குற்றவாளிகளே காரணம் என்று குற்றஞ்சாட்டினா். காவல் துறையினரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் தடியடி நடத்தி பாஜகவினரை கலைந்து போகச் செய்தனா்.

இந்த வன்முறை மாநில அரசின் துணையுடன் நடைபெற்றுள்ளதாக மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் விமா்தித்துள்ளாா். அரசமைப்புச் சட்டப் பிரிவு 167-இன்படி, வன்முறை தொடா்பாக தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, அறிக்கை அனுப்புமாறு மம்தாவுக்கு போஸ் உத்தரவிட்டுள்ளாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.