சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்: இருவர் சுட்டுக் கொலை!

மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் அட்டகாசம் பற்றி..

News image
சுட்டுக் கொலை
Updated On :25 நவம்பர் 2024, 7:59 am

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குத்ரி தொகுதிக்கு உள்பட்ட கிரு கிராமத்தில் போலீஸார் குழு விரைந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் தெரிவித்தார்.

இறந்தவர்களில் ஒருவர் ரவி பான் என அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கிராமத்திலிருந்து மேலும் இருவர் இடதுசாரி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தொலைதூரப் பகுதியில் நெட்வொர்க் பிரச்னை காரணமாக போலீஸார் குழுவைத் தொடர்பு கொள்ள முடியாததால் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றார்.

போலீஸ் குழு கிராமத்திலிருந்து திரும்பிய பிறகு சம்பவம் பற்றிய விவரங்கள் கிடைக்கும் என்று எஸ்பி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.