ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்: இருவர் சுட்டுக் கொலை!
மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் அட்டகாசம் பற்றி..


ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குத்ரி தொகுதிக்கு உள்பட்ட கிரு கிராமத்தில் போலீஸார் குழு விரைந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் தெரிவித்தார்.
இறந்தவர்களில் ஒருவர் ரவி பான் என அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கிராமத்திலிருந்து மேலும் இருவர் இடதுசாரி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தொலைதூரப் பகுதியில் நெட்வொர்க் பிரச்னை காரணமாக போலீஸார் குழுவைத் தொடர்பு கொள்ள முடியாததால் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றார்.
போலீஸ் குழு கிராமத்திலிருந்து திரும்பிய பிறகு சம்பவம் பற்றிய விவரங்கள் கிடைக்கும் என்று எஸ்பி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...