அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்: இருவர் சுட்டுக் கொலை!

மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் அட்டகாசம் பற்றி..

News image

சுட்டுக் கொலை

Updated On :25 நவம்பர் 2024, 1:29 pm IST

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குத்ரி தொகுதிக்கு உள்பட்ட கிரு கிராமத்தில் போலீஸார் குழு விரைந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் தெரிவித்தார்.

இறந்தவர்களில் ஒருவர் ரவி பான் என அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கிராமத்திலிருந்து மேலும் இருவர் இடதுசாரி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தொலைதூரப் பகுதியில் நெட்வொர்க் பிரச்னை காரணமாக போலீஸார் குழுவைத் தொடர்பு கொள்ள முடியாததால் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றார்.

போலீஸ் குழு கிராமத்திலிருந்து திரும்பிய பிறகு சம்பவம் பற்றிய விவரங்கள் கிடைக்கும் என்று எஸ்பி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.