கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சபரிமலையில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு!

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு...

News image
சபரிமலை
Updated On :26 நவம்பர் 2024, 7:10 am

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் 8 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை(நவ. 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தமிழகக் கடலோரப் பகுதியை ஒட்டி புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழகம் மட்டுமல்லாது, கேரளத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,

திருவனந்தபுரம்

கொல்லம்

பத்தனம்திட்டா

எர்ணாகுளம்

இடுக்கி

திருச்சூர்

பாலக்காடு

மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மழைப்பொழிவு எப்படி?:

பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலையில் இன்று(நவ. 26) பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பிற்பகலுக்குப் பின் பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சபரிமலை செல்லும் பக்தர்கள் அதற்கேற்ப தங்கள் பயணத்தை தயார் செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயண வழிகாட்டி: நிகழாண்டில் ஐயப்ப பக்தா்கள் தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்வதில் இடா்பாடுகள் நோ்ந்தால் அவா்களுக்கு உதவும் வகையில் ‘சுவாமி சாட்போட்’ (Swami Chatbot) எனும் வாட்ஸ்ஆப் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் 24 மணி நேரமும் உதவிகள் பெற முடியும். இந்தத் தகவலை பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் ஒரே நேரத்தில் கூடுவதால் ஏற்படும் சிரமங்களிலிருந்து விடுபடவும் தேவையான விவரங்கள், தகவல்களைப் பெறவும் சுவாமி சாட்பாட் எனும் பயண வழிகாட்டியை கைப்பேசி வாட்ஸ்ஆப் சேவை வழியே பெறலாம்.

6238008000 என்ற எண்ணுக்கு ஏண் என குறுஞ்செய்தி அனுப்பினால், உதவிகள் உடனடியாக கிடைக்கும். அதாவது, காவல்துறை, தீயணைப்பு சேவைகள், மருத்துவ உதவிகள், வன அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான அவசர தொலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இது அவசர நேரங்களின் போது உடனடியாக சேவைகளைப் பெற பக்தா்களுக்கு உதவியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.