கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உங்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது? போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் அமைச்சர் கேள்வி!

மேற்கு வங்கத்தில் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர்.

News image

மேற்கு வங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் செல்லும் மருத்துவர்கள்.

PTI

Updated On :31 அக்டோபர் 2024, 2:52 pm

DIN

மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்திவரும் மருத்துவர்களுக்கு நிதியுதவி எங்கிருந்து வருகிறது என மேற்கு வங்க விவசாயத் துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆர்ஜிகார் மருத்துவமனை வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடக்கவில்லை என்று அங்குள்ள இளம் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதில், அரசு இந்த வழக்குத் தொடர்பாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி சில மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட துர்கா பூஜை நிகழ்வு முடிந்து பேசிய விவசாயத் துறை அமைச்சர் சோவந்தேவ் சட்டோபாத்யாய், “நீங்கள் என்ன காரணத்திற்காகப் போராட்டம் நடத்துகிறீர்கள்? எதற்காக அனைத்து கோபத்தையும் அரசின் மேல் திருப்புகிறீர்கள் என நான் உங்களிடம் கேட்கலாமா?

உங்களுக்கான நிதி ஆதாரம் என்ன? எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது?” என போராட்டம் நடத்திவரும் மருத்துவர்களைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய மூத்த மருத்துவர் சுபர்னா கோஸ்வாமி, “இதுபோன்ற பேச்சுக்கள் போராட்டம் தொடர்பாக அரசின் அசௌகரியத்தையே வெளிக்காட்டுகின்றன” எனக் கூறினார்.

இதற்கு முன்னர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களான எம்பி கல்யான் பந்தோபாத்யாய், எம்எல்ஏ சௌகத் மொல்லா, தபாஸ் சட்டர்ஜி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அரசியல் காரணங்களுக்காக ஒன்றிணைந்ததாகக் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.