வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கொல்கத்தாவில் சாலையில் படுத்து மருத்துவர்கள் போராட்டம்!

கொல்கத்தாவில் இளநிலை மருத்துவர்கள் போராட்டம் தொடருகிறது

News image
- படம் | பிடிஐ
Updated On :3 செப்டம்பர் 2024, 8:25 am

DIN

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஓர் அறையில் கடந்த மாதம் 9-ஆம் தேதி, 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதிகோரி மருத்துவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாடெங்கிலும் நடைபெற்ற மருத்துவர்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொல்கத்தாவில் இளநிலை மருத்துவர்களின் போராட்டம் தொடருகிறது. லால்பஸார் பகுதியில் இளநிலை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Story image

லால் பஜார் பகுதியில் அமைந்துள்ள காவல்துறை தலைமையகத்தை நோக்கி திங்கள்கிழமை(செப். 2) பகல் 2 மணிக்கு பேரணியாகச் சென்ற மருத்துவர்கள் காவல்துறை ஆணையர் வினீத் கோயல் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேற காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் திங்கள்கிழமை(செப். 2) இரவு முழுவதும் லால் பஜார் பகுதியில் வீதிகளில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமையும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் ஏராளமான காவலர்கள் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Story image

பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சம்பவம் நிகழ்ந்த ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்பட நால்வரை அதிகாரிகள் திங்கள்கிழமை(செப். 2) கைது செய்துள்ளனர். சந்தீப் கோஷின் பாதுகாவலர் அஃப்சர் அலி, மருத்துவமனை ஊழியர்கள் பிப்லாவ் சின்கா, சுமன் ஹஸாரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் விசாரணை தொடருகிறது.

இதனிடையே, திரிணமூல் காங்கிரஸின் மாணவர் அணியிலிருந்து மூத்த உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதுநிலை பயிற்சி மருத்துவராக இருக்கும் அந்த நபர், உயிரிழந்த பெண் மருத்துவர் கொலையுண்ட அறையில் இருந்தாக சந்தேகிக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து அவர் அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.