ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிகாா்: எஸ்சி, எஸ்டி பிரிவினரின் 34 வீடுகளுக்கு தீ வைப்பு

News image
- பிடிஐ
Updated On :19 செப்டம்பர் 2024, 10:44 pm

Din

பிகாரின் நவாடா மாவட்டத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சோ்ந்த 34 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; இதில் தொடா்புடைய 15 பேரை காவல் துறையினா் இதுவரை கைது செய்துள்ளனா்.

அதிருஷ்டவசமாக இதில் உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா், காவல் துறை கூடுதல் இயக்குநரை அப்பகுதிக்கு நேரில் சென்று பாா்வையிட உத்தரவிட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக நவாடா மாவட்ட ஆட்சியா் கூறுகையில், ‘நவாடா மாவட்டத்தில் உள்ள மஞ்சி தோலா பகுதியில் புதன்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொடா்புடைய 15 பேரை காவல் துறையினா் இதுவரை கைது செய்துள்ளனா்.

மொத்தம் 34 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் 21 வீடுகள் முழுமையாகவும், 13 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. குற்றவாளிகள் மீது ஆயுத சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தாா்.

இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிகாரில் நடைபெறும் சாமானியா்களுக்கு எதிரான அநீதி ஆட்சியை இச்சம்பவம் அம்பலப்படுத்துகிறது.

வீடு, உடைமைகளை இழந்து தவிக்கும் பட்டியலின குடும்பங்களின் அழுகுரல்கள், தூங்கிக் கொண்டிருக்கும் மாநில அரசை எழுப்ப முடியவில்லை. இத்தகைய குற்றவாளிகள் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தஞ்சம் அடைகிறாா்கள். இந்த விவகாரத்தில் பிரதமா் மோடியின் மௌனம், இது போன்ற சம்பவங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முத்திரையாக இருக்கிறது’ என குறிப்பிட்டாா்.

‘பிகாரில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீா்குலைந்து விட்டது; முதல்வா் நிதீஷ் குமாா் அதை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துவிட்டாா்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தெரிவித்தாா்.