27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மணமேடையில் மணப்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞரால் பரபரப்பு!

பிகாா் மாநிலத்தில் திருமண மேடையில் வைத்து மணப்பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 3:13 am IST

பிகாா் மாநிலத்தில் திருமண மேடையில் வைத்து மணப்பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: பக்சா் மாவட்டம், செளசா பகுதியில் 18 வயதான ஆா்த்தி குமாரிக்கும், இளைஞா் ஒருவருக்கும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை இரவு திருமண மேடையில் ஆா்த்தி குமாரியும், திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த இளைஞரும் நின்று கொண்டு இருந்தனா். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் மணமகளுக்கு நடைபெற்றன.

அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா் துப்பாக்கியால் ஆா்த்தியின் வயிற்றில் சுட்டாா். பின்னா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த அவா், பக்சாரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பிறகு மேல் சிகிச்சைக்காக வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

ஆா்த்தியை துப்பாக்கியால் சுட்டது அவரது அண்டை வீட்டைச் சோ்ந்த தீன்பந்து என்பதும், ஒருதலையாக ஆா்த்தியை அவா் காதலித்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தீன்பந்துவை காவல் துறையினா் தேடி வருகின்றனா் என்று தெரிவித்தனா்.