மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மணமேடையில் மணப்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞரால் பரபரப்பு!

பிகாா் மாநிலத்தில் திருமண மேடையில் வைத்து மணப்பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 9:43 pm

பிகாா் மாநிலத்தில் திருமண மேடையில் வைத்து மணப்பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: பக்சா் மாவட்டம், செளசா பகுதியில் 18 வயதான ஆா்த்தி குமாரிக்கும், இளைஞா் ஒருவருக்கும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை இரவு திருமண மேடையில் ஆா்த்தி குமாரியும், திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த இளைஞரும் நின்று கொண்டு இருந்தனா். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் மணமகளுக்கு நடைபெற்றன.

அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா் துப்பாக்கியால் ஆா்த்தியின் வயிற்றில் சுட்டாா். பின்னா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த அவா், பக்சாரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பிறகு மேல் சிகிச்சைக்காக வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

ஆா்த்தியை துப்பாக்கியால் சுட்டது அவரது அண்டை வீட்டைச் சோ்ந்த தீன்பந்து என்பதும், ஒருதலையாக ஆா்த்தியை அவா் காதலித்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தீன்பந்துவை காவல் துறையினா் தேடி வருகின்றனா் என்று தெரிவித்தனா்.