அயோத்தி ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையுள்ள மணியைப் பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உ.பி.யின் எட்டா மாவட்டத்தில் ஜலேசர் நகரத்தில் 2,400 கிலோ எடையுள்ள அஷ்டதாது(எட்டு உலோகங்கள்) கொண்ட ஒரு பெரிய மணியைப் பக்தர்கள் இணைந்து நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த மணி 25 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட இந்த மணியின் ஓசை சுமார் 10 கி.மீ வரை கேட்கக்கூடிய திறனுடையதாக அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









