அயோத்தி ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையுள்ள மணியைப் பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உ.பி.யின் எட்டா மாவட்டத்தில் ஜலேசர் நகரத்தில் 2,400 கிலோ எடையுள்ள அஷ்டதாது(எட்டு உலோகங்கள்) கொண்ட ஒரு பெரிய மணியைப் பக்தர்கள் இணைந்து நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த மணி 25 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட இந்த மணியின் ஓசை சுமார் 10 கி.மீ வரை கேட்கக்கூடிய திறனுடையதாக அமைக்கப்பட்டுள்ளது.