இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிகாரில் அரசியல் மாற்றம்: பாஜக எம்எல்ஏ வெளியிட்ட முக்கிய தகவல்

ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் எங்களுடன் கைகோர்த்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் என்று பாஜக எம்எல்ஏ ஞானேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 ஜனவரி 2024, 11:42 am

DIN


பாட்னா: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் எங்களுடன் கைகோர்த்தால் பிகாரில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் என்று பாஜக எம்எல்ஏ ஞானேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பிகாரில், நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வேகமாகப் பரவி வரும் நிலையில், பாஜக எம்எல்ஏவின் இந்தப் பேச்சு அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நிதீஷ் குமாரை மிகவும் பிடிக்கும். எதுவாக இருந்தாலும் இன்னும் இரண்டு நாள்களில் தெரிந்துவிடும் என்றும் அவர் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மாற்றம் நிச்சயம், அதற்கு மிகவும் குறுகிய காலமே உள்ளது. நேற்று பாஜக இது தொடர்பாக முடிவெடுத்துவிட்டது. நிதீஷ் குமார் ஏற்கனவே தயாராகத்தான் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதீஷ் குமாரை மிகவும் பிடிக்கும். பாஜகவுடன் நிதீஷ் குமார் கைகோர்த்தால் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெல்லும். எதுவாக இருந்தாலும் இன்னும் இரண்டு நாள்களில் முடிவாகிவிடும். பிகாரிலும் விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையவிருக்கிறது என்று ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.