மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவைகளில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் மக்கள் இன்று சிக்கலை சந்தித்துள்ளனர்.

News image
எஸ்பிஐ வங்கி
Updated On :1 ஏப்ரல் 2025, 10:27 am

DIN

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மொபைல் வங்கி, ஏடிஎம் மூலம் பணமெடுத்தல், கூகுள் பே போன்ற செயலிகளில் பணம் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இன்று காலை 8.15 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரை சிக்கல் இருந்ததாகவும், காலை முதல் சுமார் ஆயிரம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கிச் சேவை பாதிக்கப்படுவது தொடர்பான தகவல்களை அறிய உதவும் இணையதளத்தில், எஸ்பிஐ வங்கியின் மொபைல் சேவை 64 சதவீதம் பாதிக்கப்பட்டதாகவும், 33 சதவீத பணப்பரிமாற்றங்கள் பாதிக்கப்பட்டதாகவும், எஸ்பிஐ ஏடிஎம்களில் 3 சதவீதம் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சேவையில் பாதிப்பு ஏற்பட்டதை எஸ்பிஐ வங்கியும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நிதியாண்டு முடிந்ததையடுத்து, டிஜிட்டல் சேவையில் ஏப்ரல் 1ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வேரை சேவைகள் பாதிக்கப்படும் என்றும், யுபிஐ லைட் சேவை அல்லது ஏடிஎம் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், இதனால் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

நிதியாண்டு முடிவடையும் நிலையில், எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளின் டிஜிட்டல் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது.

சில வங்கிகளில் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் யுபிஐ சேவைகள் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.