ரயில்களில் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட செல்போன்கள் குறித்து புகாரளிக்க சி.இ.ஐ.ஆர். தளத்தைப் பயன்படுத்தலாம் என்று ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ரயில்களில் தொலைந்துபோன செல்போன்களைக் கண்டறிந்து திரும்பப் பெற, ரயில் மடாத் செயலி அல்லது உதவி மைய எண் 139-ஐ தொடர்புகொள்ள ரயில்வே பாதுகாப்புப் படை அறிவுறுத்துகின்றனர். தொலைந்த அல்லது திருடப்பட்ட செல்போன்களைத் தடுக்கவும் (Block), கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் வடிவமைக்கப்பட்ட சி.இ.ஐ.ஆர். (CEIR) தளத்தை, இழந்த தொலைபேசிகளை மீட்டெடுக்கவும், சட்டவிரோதமாக வைத்திருப்பதையும் மறுவிற்பனை செய்வதையும் தடுக்கவும் பயன்படுத்தலாம்.
தொலைந்துபோன செல்போன்கள் குறித்து, இந்தத் தளத்தில் புகாரளித்தால், செல்போனின் ஐஎம்இஐ எண்ணை சைபர் காவல்துறை தடுத்து நிறுத்தும்.
மேலும், தொலைந்துபோன செல்போனில் புதிய சிம் கார்டுடன் பயன்படுத்துவது தெரிய வந்தால், அதனை உரியவரிடம் ஒப்படைக்குமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தப்படுவர்.
ஒருவேளை, ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தால், வழக்குப்பதிவு செய்து, மாவட்ட காவல்துறையிடம் வழக்கு ஒப்படைக்கப்படும். தொடர்ந்து, செல்போனின் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, அதன் உரிமையாளர் பெற்றுக் கொள்ளலாம்.
இதையும் படிக்க: எம்புரான் தயாரிப்பாளர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடகு கடையில் திருடப்பட்ட 42 பவுன் தங்கம், 7.5 கிலோ வெள்ளி பறிமுதல்: பெண்கள் உள்பட 4 போ் கைது

நகை மீட்பு: ஒருவா் கைது

பள்ளிக் கல்வித் துறையில் புதிய பதவிகள் உருவாக்கம்: சிறப்புத் தகுதிகள் நிா்ணயம்

ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனைகள்! வருமான வரித்துறை புதிய விதி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



