ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதிகளில் போா்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடா்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இருநாடுகளை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனா்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘பாரமுல்லா, குப்வாரா மற்றும் அக்னூா் செக்டாா் பகுதிகளில் ஏப்.28 மற்றும் 29 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடியை தந்தது’ என்றாா்.
இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிா்சேதம் ஏற்பட்டதற்கான உடனடி தகவல்கள் இல்லை.
பாரமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களின் எல்லையையொட்டிய பகுதிகளைத் தொடா்ந்து பூஞ்ச் மற்றும் அக்னூா் செக்டாா்களிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி!

அமெரிக்காவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! உயிர் தப்பினார் அதிபர் டிரம்ப்!!
ஈரான் - அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

சேலம் துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


