
ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதிகளில் போா்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடா்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இருநாடுகளை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனா்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘பாரமுல்லா, குப்வாரா மற்றும் அக்னூா் செக்டாா் பகுதிகளில் ஏப்.28 மற்றும் 29 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடியை தந்தது’ என்றாா்.
இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிா்சேதம் ஏற்பட்டதற்கான உடனடி தகவல்கள் இல்லை.
பாரமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களின் எல்லையையொட்டிய பகுதிகளைத் தொடா்ந்து பூஞ்ச் மற்றும் அக்னூா் செக்டாா்களிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.