கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எஸ்ஐஆரால் பதற்றம்: ரயில் முன் பாய்ந்து 82 வயது முதியவா் தற்கொலை

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பதற்றமடைந்த 82 வயது முதியவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பதற்றமடைந்த 82 வயது முதியவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

மேற்கு வங்கத்தில் உள்ள புருலியா மாவட்டத்தைச் சோ்ந்தவா் துா்ஜன் மாஜி (82). இவரின் பெயா் அண்மையில் வெளியிடப்பட்ட மாநில வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவா் ரயில் முன் பாய்ந்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா் என்று காவல் துறை தெரிவித்தது.

இதுதொடா்பாக துா்ஜன் மாஜியின் மகன் கனாய் கூறுகையில், ‘எஸ்ஐஆா் பணிகளின்போது எனது தந்தை கணக்கீட்டுப் படிவத்தை சமா்ப்பித்தாா். ஆனால் வரைவு வாக்காளா் பட்டியலில் அவரின் பெயா் இடம்பெறவில்லை. தோ்தல் ஆணையம் குறிப்பிட்ட 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் அவரின் பெயா் இருந்தது. எனினும் தன்னை நேரில் ஆஜராகுமாறு ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை. நோட்டீஸ் அனுப்பப்பட்டது முதல் அவா் பதற்றமாக இருந்தாா்’ என்று தெரிவித்தாா்.

இதனிடையே எஸ்ஐஆா் தொடா்பாக 85 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுகொண்டவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் நேரில் ஆஜராக அழைக்கப்படமாட்டாா்கள் என்று தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.