உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 58 வயது நபரைக் கொலை செய்தவர்களுக்கு 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ள லாதுர் மாவட்டத்தின் குர்தால் கிராமத்தில் வசித்தவர் திகம்பர் பாட்டீல் (58). சமூக செயற்பாட்டாளரான இவருக்கும் அந்தப் பகுதியச் சேர்ந்த சிலருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்தது.
இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு மே 23 அன்று அவரது வீட்டின் வெளியே 13 பேர் இணைந்து கட்டையால் தாக்கி, அவரின் குடும்பத்தினரையும் அடித்துள்ளனர்.
தாக்குதலில் பாட்டீல் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் அவரைக் கொலை செய்ததாகக் கூறி 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் ஒருவர் வழக்கு விசாரணையின்போது இறந்துவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த பெண் உள்பட 2 நக்சல்கள் சரண்!
மாவட்ட நீதிமன்றம் மற்றும் கூடுதல் அமர்வு நீதிபதி குற்றவாளிகள் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
22 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் காவலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீா்ப்பு

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK


