தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த பெண் உள்பட 2 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 2 நக்சல்கள் சரணடைந்துள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :24 பிப்ரவரி 2025, 5:30 pm IST

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த பெண் உள்பட இரண்டு நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சுதேன் கோராம் (எ) ஜன்கூ மற்றும் சரிதா பொதாவி எனும் பெண் உள்பட 2 பேர் நாராயணப்பூர் மாவட்டத்தில் காவல் துறை உயர் அதிகாரி மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினரிடம் இன்று (பிப்.24) சரணடைந்துள்ளனர்.

மாவோயிஸ்டு கொள்கைகளின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளினாலும் அவர்கள் பழங்குடியினரை சீரழிப்பதினாலும் அதிலிருந்து விலகி தற்போது அவர்கள் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் நிர்வாகத்தின் மீதான மக்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில், சரண்டைந்துள்ள 2 நக்சல்களையும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் சன்மானம் அறிவித்து பாதுகாப்புப் படையினர் தேடி வந்தனர். மேலும், அவர்களுக்கு அரசு திட்டங்கள் மூலம் மறுவாழ்வு அமைத்துத் தரப்படும் எனவும், உதவி தொகையாக தற்போது ரூ.25,000 வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் நாராயணப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கிய சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியைச் சேர்ந்த 792 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.