எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

விடாமல் விரட்டிய இளைஞர்கள்! தப்பியோடிய வாகனம் விபத்துக்குள்ளானதில் இளம் பெண் பலி!

மேற்கு வங்கத்தில் இளைஞர்களிடமிருந்து தப்பியோடிய வாகனம் விபத்துக்குள்ளானதில் இளம் பெண் பலியாகியதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :24 பிப்ரவரி 2025, 5:03 pm IST

மேற்கு வங்கத்தின் பர்தாமன் மாவட்டத்தில் விடாமல் விரட்டிய இளைஞர்களிடம் தப்பியோட முயன்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளம் பெண் பலியாகியுள்ளார்.

ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான சுசந்திரா சத்தோபாதய் (வயது 27), இவர் இன்று (பிப்.24) அதிகாலை 3 மணியளவில் தன்னுடன் பணிபுரியும் 3 பேருடன் ஓர் நிகழ்ச்சிக்காக காயா பகுதியை நோக்கி தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, வழியில் ஒரு பெட்ரோல் நிரப்பி விட்டு தங்களது பயணத்தைத் தொடர முற்பட்டபோது மற்றொரு வெள்ளை நிற காரில் 5 இளைஞர்கள் பின் தொடர்ந்து துரத்தியுள்ளனர். மேலும், சுசந்திராவை நோக்கி ஆபாசக் கருத்துக்களை தெரிவித்ததுடன், கண்மூடித் தனமாக அவர்களது வாகனத்தை ஓட்டி அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பனகார் பகுதிக்கு அருகில் வந்தபோது அந்த இளைஞர்கள் சுசந்திராவின் காரை வழிமறிக்க முயன்றதில் அங்குள்ள சாலைத் தடுப்பில் மோதி அவரது கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், முன்னிருக்கையில் அமர்ந்திருந்த சுசந்திராவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டவுடன் அந்த இளைஞர்கள் தங்களது காரை அங்கேயே விட்டு தப்பியோடியுள்ளனர்.

பின்னர், சுசந்திரா உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், அவருடன் பயணித்த 3 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இந்த விபத்துக்கு காரணமான 5 இளைஞர்களும் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், சுசந்திராவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கைகளை ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.