சண்டீகர் யூனியன் பிரதேசத்துக்கு தலைமைச் செயலாளர் பதவியை உருவாக்கி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 1966-ஆம் ஆண்டில் ஹரியாணா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. தலைநகரான சண்டீகருக்கு இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடிய நிலையில், அப்பகுதி யூனியன் பிரதேசமாக்கப்பட்டது.
இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக உள்ள சண்டீகா், தற்போது பஞ்சாப் ஆளுநரின் நிா்வாகத்தின்கீழ் உள்ளது. பொது கட்டட வளாகத்திலேயே இரு மாநில சட்டப் பேரவைகள் மற்றும் தலைமைச் செயலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில் சண்டீகர் தங்களுக்குதான் சொந்தம் என்று இரு மாநில அரசுகளும் மோதிக் கொண்டனர்.
இதையும் படிக்க : பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில், சண்டீகரில் நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தி மத்திய அரசு ஆணையை வெளியிட்டுள்ளது. அதில், சண்டீகர் யூனியன் பிரதேச அரசின் நிர்வாக ஆலோசகர் பதவியை ரத்து செய்து, தலைமைச் செயலாளர் பதவியை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சண்டீகர் பிரதேசத்தில் கூடுதலாக இரண்டு ஐஏஎஸ் பதவிகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன்மூலம் சண்டீகர் பிரதேசத்துக்கான ஐஏஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 11 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத பதவி உயா்வு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தல்

புதுச்சேரிக்கு ஆண்டுக்கு 10% கூடுதல் நிதி: மத்திய அரசுக்கு முதல்வா் ரங்கசாமி வலியுறுத்தல்

125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி

ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



