மாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்! ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதி அன்னப்பிரசாத மெனுவில் புதிய உணவு! ஆனால்..

திருப்பதி அன்னப்பிரசாத மெனுவில் புதிய உணவாக வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத மசால் வடை இணையவிருக்கிறது.

News image
புதிய உணவு
Updated On :21 ஜனவரி 2025, 7:55 am

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னப்பிரசாதத்தில், புதிய உணவு ஒன்று சேர்கிறது. இதனால் பக்தர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகி பி.ஆர். நாயுடு இது குறித்து கூறகையில், பூண்டு, வெங்காயம் சேர்க்கப்படாத மசால் வடை தயாரிக்கப்பட்டு, அன்னபிரசாதத்துடன் வழங்கும் முறையை முயற்சித்துள்ளோம்.

முதல் முயற்சியாக, ஜனவரி 20ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 5000 மசால் வடைகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்கியிருக்கிறது. இது நன்றாக செல்லும்பட்சத்தில், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னப்பிரசாதமாக சாப்பாடு, சாம்பார், பொரியல் அல்லது சாப்பாடு துவையல் போன்றவற்றுடன் தற்போது மசால் வடையும் இணைந்துள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக, இந்த மசால் வடையில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாமல், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு, உணவுடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் சுவை நன்றாக இருப்பதாக பக்தர்களும் தெரிவித்திருக்கிறார்கள். தென்னிந்திய உணவுகளில் வடைக்கு என்று எப்போதுமே தனி இடம் உண்டு. அதுபோல, திருமலை அன்னப்பிரசாதத்தையும் இன்னும் மேம்படுத்தும் வகையில் இந்த மசால் வடை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.