சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

திருப்பதி அன்னப்பிரசாத மெனுவில் புதிய உணவு! ஆனால்..

திருப்பதி அன்னப்பிரசாத மெனுவில் புதிய உணவாக வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத மசால் வடை இணையவிருக்கிறது.

News image

புதிய உணவு

Updated On :21 ஜனவரி 2025, 1:25 pm IST

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னப்பிரசாதத்தில், புதிய உணவு ஒன்று சேர்கிறது. இதனால் பக்தர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகி பி.ஆர். நாயுடு இது குறித்து கூறகையில், பூண்டு, வெங்காயம் சேர்க்கப்படாத மசால் வடை தயாரிக்கப்பட்டு, அன்னபிரசாதத்துடன் வழங்கும் முறையை முயற்சித்துள்ளோம்.

முதல் முயற்சியாக, ஜனவரி 20ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 5000 மசால் வடைகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்கியிருக்கிறது. இது நன்றாக செல்லும்பட்சத்தில், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னப்பிரசாதமாக சாப்பாடு, சாம்பார், பொரியல் அல்லது சாப்பாடு துவையல் போன்றவற்றுடன் தற்போது மசால் வடையும் இணைந்துள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக, இந்த மசால் வடையில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாமல், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு, உணவுடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் சுவை நன்றாக இருப்பதாக பக்தர்களும் தெரிவித்திருக்கிறார்கள். தென்னிந்திய உணவுகளில் வடைக்கு என்று எப்போதுமே தனி இடம் உண்டு. அதுபோல, திருமலை அன்னப்பிரசாதத்தையும் இன்னும் மேம்படுத்தும் வகையில் இந்த மசால் வடை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.