ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மகா கும்பமேளா: மௌனி அமாவாசை நாளில் 5.7 கோடி பேர் புனித நீராடல்!

மகா கும்பமேளாவில் மெளனி அமாவாச நாளான இன்று (ஜன. 29) 5.7 கோடி மக்கள் புனித நீராடியுள்ளனர்.

News image

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்கள்... - PTI

Updated On :29 ஜனவரி 2025, 7:17 pm IST

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மெளனி அமாவாச நாளான இன்று (ஜன. 29) 5.7 கோடி மக்கள் புனித நீராடியுள்ளதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மகா கும்பமேளாவில் 19.9 கோடி பக்தர்கள் பங்கேற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

புனித நீராடும் பக்தர்கள், அகோரிகள்

புனித நீராடும் பக்தர்கள், அகோரிகள் - PTI

மௌனி அமாவாசையான இன்று (ஜன. 29) திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்தனர். இதன் விளைவாக இன்று அதிகாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இக்கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மெளனி அமாவாச நலான இன்று திரிவேணி சங்கமத்தில் 5.7 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 5.5 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

நடப்பு மகா கும்பமேளாவில் சுமாா் 40 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பார்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

திரிவேணி சங்கமத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், காவல் துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒருபுறமும், ஞானிகள், அகோரிகள் புனித நீராட மறுபுறமும் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க பக்தர்கள் புனித நீராடிய பிறகு ஞானிகள், அகோரிகள் புனித நீராட மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.