இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

News image

முதல்வர் ரேகா குப்தா - கோப்புப்படம்.

Updated On :6 ஜூன் 2025, 7:12 pm IST

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி இரவு, காஜியாபாத் ஆணையரகத்தின் கோட்வாலி காவல் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது அவர், தில்லி முதல்வரைக் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

காஜியாபாத் கட்டுப்பாட்டு அறை உடனடியாக தில்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தது. தில்லி போலீஸார் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்தது. அதன் பிறகு அழைப்பாளரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அழைப்பு வந்த எண்ணைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன.

கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழைப்பு விடுத்த நபர் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார். இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். காஜியாபாத் மற்றும் தில்லி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி, மர்ம நபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.