லண்டன் பயணத் தேதியை மாற்றியதால் விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத் தேதியை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.
விஜய் ரூபானி
விஜய் ரூபானி
Published on
Updated on
1 min read

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத் தேதியை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்தில் சென்ற அவர் துரதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் பலியானார்.

லூதியானா (மேற்கு) இடைத்தேர்தல் காரணமாக தனது லண்டன் பயணத் தேதியை விஜய் ரூபானி கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தற்போது தெரிவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக பஞ்சாப் அரசியலில் ஈடுபட்டு வந்த அவர் லூதியானா மேற்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக தீவிர பிரசாரம் செய்து வந்திருக்கிறார்.

விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி

விஜய் ரூபானி கடந்த ஜூன் 5 ஆம் தேதியே தனது மகளைச் சந்திக்க லண்டன் செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதே தேதியில் அவரது மனைவி அஞ்சலி ரூபானி லண்டன் சென்றுவிட்டார். ஆனால் இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானியின் பயணத் திட்டங்கள் தாமதமாகின.

இதையடுத்து அவர் தனது லண்டன் பயணத்தை ஜூன் 5 ஆம் தேதியில் இருந்து ஜூன் 12ஆம் தேதிக்கு மாற்றியிருக்கிறார். இந்த நிலையில் ஜூன் 12ஆம் தேதி லண்டன் புறப்பட்டபோதுதான் விஜய் ரூபானி விமான விபத்தில் சிக்கி பலியானார். பஞ்சாபின் லூதியானா (மேற்கு) சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூன் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com