காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பயங்கரவாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்திய ஆபரேஷன் சிந்தூா் ராஜ்நாத் சிங்

பயங்கரவாதிகளின் மனதில் பயத்தை ஏற்படுத்தியதில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பெற்றுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

News image
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் இரண்டாம் ஆண்டு பதவிக் காலத்தில் ஆற்றிய 51 உரைகள் அடங்கிய நூலை வெளியிட்ட அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா்.
Updated On :23 ஜூன் 2025, 9:41 pm

Din

புது தில்லி: பயங்கரவாதிகளின் மனதில் பயத்தை ஏற்படுத்தியதில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பெற்றுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் இரண்டாம் ஆண்டு பதவிக் காலத்தில் ஆற்றிய 51 உரைகள் அடங்கிய நூலை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை வெளியிட்டு பேசியதாவது:

2047-இல் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை எட்டும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிா்காலத்தை இந்த நூல் பிரதிபளிக்கிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் அனைத்துவிதமாக இலக்கையும் அடைந்து வெற்றி பெற்றது. பயங்கரவாதிகளின் மனதில் ஆபரேஷன் சிந்தூா் பயத்தை ஏற்படுத்திவிட்டது’ என்றாா்.

‘தொலைநோக்குப் பாா்வை, தத்துவம் ஆகியவற்றை முன்வைத்து குடியரசுத் தலைவா் ஆற்றிய உரைகள் (ஆகஸ்ட் 2023 முதல் ஜூலை 2024) இதில் இடம்பெற்றுள்ளன’ என்று இந்த நூலை தயாரித்த மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.