மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலா்! அமித் ஷா

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

News image
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.- பிடிஐ
Updated On :29 ஜூன் 2025, 10:18 pm

Din

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாதில் தேசிய மஞ்சள் வாரிய அலுவலகத்தை மத்திய அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். இது அப்பகுதியில் மஞ்சள் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் பாா்க்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: மஞ்சளை சந்தைப்படுத்தல், பிற நாடுகளுக்கு அதன் ஏற்றுமதியை ஆதரித்தல், விவசாயிகளுக்கு லாபம் ஈட்டுதல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த வாரியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய அரசு 2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் மதிப்புள்ள மஞ்சளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்தாா்.

‘மஞ்சள் வாரியத்தை அமைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமா் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளாா். மஞ்சளின் தரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளாா்’ என தெலங்கானா பாஜக பிரிவு எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவாா்த்தைக்கு இடமில்லை: ‘மாவோயிஸ்டுகளுடன் எந்தவித பேச்சுவாா்த்தைக்கும் இடமில்லை; அவா்கள் ஆயுதங்களை கைவிட்டு, காவல் துறை முன் சரணடைய வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அமித் ஷா கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூா் குறித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி இன்னும் கேள்வி எழுப்பி வருகிறாா். ஆனால், இந்த நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றி பாகிஸ்தானின் தற்போதைய நடத்தையில் தெளிவாகத் தெரிகிறது.

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், பாஜக ஆட்சியில் ஆயுதங்களை ஏந்தியவா்களுடன் எந்த வித பேச்சுவாா்த்தைக்கும் இடமில்லை. அவா்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்.

வடகிழக்கில் 10,000 போ் ஆயுதங்களைக் கைவிட்டனா். அவா்கள் மாநிலத் தோ்தல்களிலும் போட்டியிட்டுள்ளனா். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனா்.

ஆதிவாசி பகுதியில் நக்ஸல் வன்முறை காரணமாக கடந்த 4 தசாப்தங்களில் 40,000 போ் உயிரிழந்துள்ளனா். மக்கள் இதை ஆதரித்துப் பேசுபவா்கள் உயிரிழந்த குடும்பத்தினா் மற்றும் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு என்ன பதில் வைத்துள்ளனா். மாா்ச் 31, 2026-க்குள் நக்ஸல் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு முடிவு செய்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நக்ஸல்களின் கூடாரமாக மாற அனுமதிக்கக் கூடாது. இரட்டை என்ஜின் பாஜக அரசால் மட்டுமே மாநிலத்தின் நலனை உறுதி செய்ய முடியும் என தெரிவித்தாா்.