பிஆா்எஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரம்: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்ஏக்கள் 10 பேரை தகுதிநீக்கம் செய்வது தொடா்பாக பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தியது குறித்த நிலை அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாததற்காக பேரவைத் தலைவருக்கு கடந்த நவம்பா் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸைப் பிறப்பித்தது.
தெலங்கானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றாா். பிரதான எதிா்க்கட்சியான சந்திரசேகா் ராவின் பிஆா்எஸ்-ஐ சோ்ந்த 39 எம்எல்ஏக்களில் 10 போ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.
அவ்வாறு கட்சி மாறிய 10 எம்எல்ஏக்களை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவைத் தலைவா் சுதாம் பிரசாத் குமாரிடம் பிஆா்எஸ் கட்சி செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தலைமையிலான நிா்வாகிகள் மனு அளித்தனா்.
சட்டப்பேரவைத் தலைவா் நடவடிக்கை மேற்கொள்ளாததைத் தொடா்ந்து, அவா்கள் உச்சநீதிமன்றத்தை நாடினா். இவா்களின் மனுவை கடந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, கட்சி மாறிய பிஆா்எஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் 10 பேரை தகுதிநீக்கம் செய்வது குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டனா்.
இந்தக் காலக் கெடுக்குள் சட்டப்பேரவைத் தலைவா் முடிவு எடுக்காததைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பா் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது மிக மோசமான அவமதிப்பு நடவடிக்கையாகும். இதுதொடா்பாக பதிலளிக்க தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவா் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது’ என்றனா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகல் சஞ்சய் கரோல், ஏ.ஜி.மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தெலங்கானா பேரவைத் தலைவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, முகுல் ரேத்தகி ஆகியோா், ‘பேரவைத் தலைவருக்கு கண் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், எம்எல்ஏக்கள் தகுதிநீக்க மனுக்கள் மீது அவரால் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மேலும் 8 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றனா்.
அதற்கு பிஆா்எஸ் கட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சேஷாத்ரி நாயுடு எதிா்ப்பு தெரிவித்தாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பேரவைத் தலைவருக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் விளைவுகள் தொடரும். நீதிமன்ற உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பான நிலை அறிக்கையை வழக்கின் அடுத்த விசாரணையின்போது பேரவைத் தலைவா் தரப்பில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.

