நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கரப்பான்பூச்சி கட்சி போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியை பணியிடை நீக்கம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்றதால் ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டது பற்றி...

News image

கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்தில்... - படம் - பிடிஐ

Updated On :11 ஜூன் 2026, 3:06 pm IST

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியை ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சில நாள்களுக்குப் பிறகு, ஹரியாணா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வேலை செய்து வந்த விருந்துநிலை ஆசிரியை சுலேகா தலால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஆசிரியை சுலேகா தலால், "இது ஒரு போராட்டம்; இம்முறை இது வாழ்வா சாவா போராட்டம். இப்போது கரப்பான்பூச்சியின் தாய் களத்தில் இறங்கிவிட்டாள். நாம் நம் பிள்ளைகளுடன் இருக்கிறோம்” என்று ஆவேசமாகப் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து, ஆசிரியை சுலேகா தலால்-ஐ ஜூன் 8 முதல் இடைநீக்கம் செய்வதற்கான உத்தரவை ரோத்தக் மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்தார். இருப்பினும், அந்த உத்தரவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை.

முன்னதாக, நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது, சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறையில் நடைபெற்ற குளறுபடிகள் போன்றவற்றைக் காரணம் காட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

சுமார் 7,000 மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் அவர்கள் வைத்த கோரிக்கைகள் அரசியல் களத்தில் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

A teacher has been suspended for participating in a protest at Delhi's Jantar Mantar demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.