மகாராஷ்டிரத்தில் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்தில் சனிக்கிழமை மதியம் அனுமன் கோயில் ஒன்றின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் பலலர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமம் சத்ரபதி சம்பாஜிநகரிலிருந்து சுமார் 190 கி.மீ தொலைவில் உள்ள மான்வத் சாலையில் அமைந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், கோயிலின் சபா மண்டபத்தின் மேற்கூரை பிற்பகல் 3.30 மணியளவில் இடிந்து விழுந்தது.
போலீஸாரும் மாவட்ட நிர்வாகமும் தங்களது மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 3 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளிலிருந்து இதுவரை சுமார் 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.
சனிக்கிழமை அனுமன் வழிபாட்டிற்கு உகந்த நாள் என்பதால், கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததாக மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.
Summary
At least three persons died and several others were injured after a slab of a Hanuman temple collapsed at Yashwadi village in Maharashtra's Parbhani district on Saturday afternoon, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி

மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு! உத்தவ் சிவசேனை மீண்டும் உடைகிறதா?

மகாராஷ்டிரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில்..!








