நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன்: மமதா பானர்ஜி

ராகுல், சோனியா காந்தி தொடர்புகொண்டு பேசியதாக மமதா பானர்ஜி கூறினார்.

News image

செய்தியாளர் சந்திப்பில் மமதா பானர்ஜி - ஏஎன்ஐ

Updated On :5 மே 2026, 4:30 pm IST

இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளை அடுத்தடுத்து மேற்கொள்ளவுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இன்று (ஏப். 5) தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207, திரிணமூல் காங்கிரஸ் 80, காங்கிரஸ் 2, இதர கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு மையங்களில் வன்முறை நேரிட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை சில இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. சில இடங்களில் வன்முறை நடக்கும்போதே எண்ணும் பணிகள் தொடர்ந்தன.

இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களுடன் மமதா பானர்ஜி பேசியதாவது:

சோனியா காந்தி, ராகுல், ஹேமந்த் சோரன், அரவிந்த் கேஜரிவால், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் என்னைத் தொடர்புகொண்டு பேசினர். இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் என்னுடன் துணை நிற்பதாகக் கூறியுள்ளனர். எங்களுடைய ஒற்றுமை அடுத்தடுத்த நாள்களில் மேலும் வலுவடையும் என நினைக்கிறேன். அகிலேஷ் யாதவ் இன்று இங்கு வருவதாகக் கூறினார். ஆனால், நான்தான் மறுத்துவிட்டேன். நாளை வருவதாகக் கூறியுள்ளார். மேற்கு வங்கத்திற்கு அகிலேஷ் நாளை வருவார்.

ஒவ்வொருவராக அனைவரும் வருவார்கள். எனது இலக்கு மிகத் தெளிவானது. ஒரு எளிய மனிதனாக, நான் இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன். இப்போது என்னிடம் எந்தப் பதவியும் இல்லை; எனவே, நான் ஒரு சாதாரண குடிமகன். ஆகையால், நான் உங்கள் பதவியை (நாற்காலியை) பயன்படுத்திக்கொள்கிறேன் என்று நீங்கள் என்னிடம் கூற முடியாது.

இப்போது நான் ஒரு சுதந்திரப் பறவை. எனது முழு வாழ்நாளையும் மக்கள் சேவைக்கே அர்ப்பணித்திருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளில், ஓய்வூதியமாக ஒரு பைசா கூட நான் பெற்றுக்கொண்டதில்லை. சம்பளமாகவும் ஒரு பைசா கூட நான் வாங்குவதில்லை.

ஆனால் இப்போது, ​​நான் ஒரு சுதந்திரப் பறவை. எனவே, நான் ஏதேனும் ஒரு பணியைச் செய்தாக வேண்டும்; அதை நான் நிச்சயம் செய்து முடிப்பேன். மேற்கு வங்கத்தில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குகள் திருடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை. மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்திற்கு விடுத்த சவாலாக உள்ளது. எனக் குறிப்பிட்டார்.

Summary

Mamata Banerjee says I will strengthen the INDIA team

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.