FOLLOW US

ON GOOGLE DISCOVER

தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

நீர்வீழ்ச்சியில் குளித்த 10 நாள்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி! ம.பி.யில் அதிர்ச்சி!

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் அடுத்தடுத்து நிகழ்ந்த பலி பற்றி..

Rajasthan

சடலமாக மீட்பு - file photo

Published On :2 செப்டம்பர் 2026, 12:36 pm IST

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் நீர்வீழ்ச்சிக்குச் சென்ற 10 நாள்களுக்குள் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 16 அன்று கோரா திலா பகுதிக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நால்வர் குளித்துள்ளனர். அதன்பிறகு காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. பாதிக்கப்பட்ட நால்வரின் உடல்நிலையும் ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் மோசமடைந்தது.

குடும்பத்தினரின் தகவலின்படி,

அகமதுவின் 14 வயது மகன் தாஹிர் ஆகஸ்ட் 18 அன்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்குக் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் அவரது ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்ததையடுத்து 2 நாள்களுக்குள் அவர் உயிரிழந்தார்.

அந்த அதிர்ச்சியிலிருந்து குடும்பத்தினர் மீள்வதற்கு முன்பே, அகமதுவின் சகோதரியின் 19 வயது மகனான அயாஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிவபுரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமடைந்ததையடுத்து குவாலியருக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 23ல் அவர் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, அகமதுவின் இளைய மகன்களான தருஃப் (9) மற்றும் தாசிஃப் (11) ஆகியோருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர்களது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகஸ்ட் 31 அன்று காலையில் தருஃப், அதே நாள் மாலையில் அவரது மூத்த சகோதரரும் உயிரிழந்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தது வழக்கத்திற்கு மாறான ஒன்று. இதுகுறித்து நிர்வாகமும், சுகாதாரத் துறையும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் ரிஷிஷ்வர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் தொற்றுநோய் காரணமாகவே நால்வரும் உயிரிழந்திருக்கலாம்.

இதுவரை உடற்கூராய்வு நடத்தப்படவில்லை, இறப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அவர்கள் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.