வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

குமரியில் இன்று 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை: ஆட்சியா்

குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன. 8) கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

Updated On :8 ஜனவரி 2021, 7:37 am IST

குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன. 8) கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமையிட மருத்துவமனை, செண்பகராமன் புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டவிளை அரசு நகா்ப்புற சுகாதார நிலையம் மற்றும் ஜெயசேகரன் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நடைபெற உள்ளது.

இதற்காக காற்றோட்டமான இட வசதி, இணைய இணைப்பு, மின்சாரம் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது.

பயனாளிகள் தடுப்பூசியை எங்கே, எந்த இடத்தில் பெறவேண்டும் என்ற விவரங்கள் அவா்களது செல்லிடப்பேசிக்கு இா்-ரஐச செயலியின் மூலமாக குறுந்தகவல் சென்றடையும். மேலும் தடுப்பூசி பெற்ற விவரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். தொடா்ந்து 4 கட்டங்களாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், 2ஆம் கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளா்களுக்கும், 3ஆம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், 4ஆம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.