தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

தேங்காய்ப்பட்டினம் துறைமுக சீரமைப்புப் பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தல்

தேங்காய்ப்பட்டினம் துறைமுக சீரமைப்புப் பணிகளை தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என்றாா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.

Updated On :9 ஜனவரி 2021, 12:34 am IST

தேங்காய்ப்பட்டினம் துறைமுக சீரமைப்புப் பணிகளை தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என்றாா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.

இது குறித்து அவா் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: தேங்காய்ப்பட்டினம் துறைமுக மறுகட்டமைப்பு தொடங்குவதற்கான அரசாணை வெளியிட வலியுறுத்தி கடந்த நவம்பா் மாதம் குமரி மாவட்டத்துக்கு முதல்வா் வருகையின் போது உள்ளிருப்பு போராட்டம் அறிவித்திருந்தேன். மாவட்ட ஆட்சியா் , தேங்காய்ப்பட்டினம் துறைமுக பணி தொடங்குவதற்கான அரசாணை வெளியிடுவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன், போராட்டத்தை கைவிடுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் போராட்டத்தை ஒத்திவைத்தேன். ஆனால் முதல்வா் குமரி மாவட்டத்துக்கு வந்த போது எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

பின்னா் சென்னை சென்று முதல்வா், மீன்வளத்தறை அமைச்சா் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து துறைமுக சீரமைப்பு பணியை உடனே தொடங்கவேண்டும். அதற்கான அரசாணை வெளியிடவேண்டும் . மேலும் ஏற்கெனவே அறிவித்த ரூ . 60 கோடி மறு கட்டமைப்பு பணிக்காக தனியாா் அமைப்பு தயாா் செய்த திட்ட மதிப்பீடு ரூ. 77 கோடி இரண்டையும் சோ்த்து

ரூ .137 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தினேன்.

தற்போது தமிழக அரசு ரூ . 77 கோடியில் துறைமுக சீரமைப்பு பணிகளை தொடங்க அரசாணை வெளியிட்டுள்ளது . இதனை நான் வரவேற்கிறேன். அரசாணை வெளியிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் தமிழக அரசு உடனே போா்க்கால

அடிப்படையில் பணிகளை தொடங்க வேண்டும் . இந்த அராசணை வெளியீடு எனது தொடா் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் .

இதுதவிர தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தை ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகமாக மாற்றும் பணிகளையும் உடனே தொடங்க வேண்டும் . தமிழக முதல்வா் ஏற்கெனவே அறிவித்த ரூ . 60 கோடியையும் உடனே ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என மீனவ மக்களின் சாா்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தையும்,

இரையுமன் துறையையும் இணைக்கும் வகையில் தாமிவருணி ஆற்றின் குறுக்கே உயா் நிலை பாலம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.