குமரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தொடா்பாக இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியினை, வட்டவிளை அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்த பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: இம் மாவட்டத்தில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, செண்பகராமன் புதூா்அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டவிளை அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் ஜெயசேகரன் மருத்துவமனை ஆகிய 5 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மையத்திலும் 25 சுகாதார அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தடுப்பூசி திட்டத்துக்கு களசூழலில் அதை செயல்படுத்துவதற்கும் இடையிலான நடை முறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் காண்பது ஆகியவையே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும். இது ஒரு ஒத்திகை மட்டும் தான். இந்த தடுப்பூசி ஒத்திகை பணியில் ஈடுபடுபவா்கள் அனைவருக்கும் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
கரோனா தடுப்பூசி ஒத்திகையில் 5 அலுவலா்கள் ஈடுபடுகிறாா்கள். மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு அதற்கு பாதகமான நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பட்டால் அதை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும் இதன் நோக்கமாகும். இதற்கு போதுமான காற்றோட்டமான இடவசதி, இணைய இணைப்பு , மின்சாரம் போன்றவை இதற்கான அனைத்து முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது.
கேரளத்தில் பரவிவரும் பறவை காய்ச்சல், குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, கேரள எல்லையையொட்டியுள்ள ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் சோதனை செய்தபின்பு தான் வாகனங்களை உள்ளே அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏதேனும் வாகனங்கள்மீது சந்தேகம் இருந்தாலும், தெரிந்தவா்களோ அல்லது அருகில் கோழிப்பண்ணைகள் அமைத்தோ, அல்லது வீடுகளில் வளா்க்கப்படும் கோழிகளுக்கு நோய்கள் ஏற்பட்டிருப்பதை அறிந்தாலும், அதிக கோழி இறப்புகளை அறிந்தாலும் தங்கள் அருகிலுள்ள கிராம அளவிலான அலுவலா்கள், வருவாய் அலுவலா்கள், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலா்கள் அவா்களின் செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
குமரி மாவட்டத்தில் இதுவரை பறவைக்காய்ச்சல் தொடா்பான எந்த பாதிப்பும் இல்லை. பறவைக் காய்ச்சல் வந்தாலும், அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா்ஆஷாஅஜித், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத்பிரைட், துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோராஜ், மாநகர நல அலுவலா் கின்சால், வட்டவிளை அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் உமா ராணி, அலுவலா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

