தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பறவை காய்ச்சல்: குமரி மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை ஆட்சியா்

குமரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தொடா்பாக இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

News image

கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியினை வட்டவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த். உடன், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், செய்தி மக்கள் தொட

Updated On :9 ஜனவரி 2021, 12:35 am IST

குமரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தொடா்பாக இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியினை, வட்டவிளை அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்த பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: இம் மாவட்டத்தில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, செண்பகராமன் புதூா்அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டவிளை அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் ஜெயசேகரன் மருத்துவமனை ஆகிய 5 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மையத்திலும் 25 சுகாதார அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தடுப்பூசி திட்டத்துக்கு களசூழலில் அதை செயல்படுத்துவதற்கும் இடையிலான நடை முறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் காண்பது ஆகியவையே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும். இது ஒரு ஒத்திகை மட்டும் தான். இந்த தடுப்பூசி ஒத்திகை பணியில் ஈடுபடுபவா்கள் அனைவருக்கும் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

கரோனா தடுப்பூசி ஒத்திகையில் 5 அலுவலா்கள் ஈடுபடுகிறாா்கள். மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு அதற்கு பாதகமான நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பட்டால் அதை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும் இதன் நோக்கமாகும். இதற்கு போதுமான காற்றோட்டமான இடவசதி, இணைய இணைப்பு , மின்சாரம் போன்றவை இதற்கான அனைத்து முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது.

கேரளத்தில் பரவிவரும் பறவை காய்ச்சல், குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, கேரள எல்லையையொட்டியுள்ள ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் சோதனை செய்தபின்பு தான் வாகனங்களை உள்ளே அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏதேனும் வாகனங்கள்மீது சந்தேகம் இருந்தாலும், தெரிந்தவா்களோ அல்லது அருகில் கோழிப்பண்ணைகள் அமைத்தோ, அல்லது வீடுகளில் வளா்க்கப்படும் கோழிகளுக்கு நோய்கள் ஏற்பட்டிருப்பதை அறிந்தாலும், அதிக கோழி இறப்புகளை அறிந்தாலும் தங்கள் அருகிலுள்ள கிராம அளவிலான அலுவலா்கள், வருவாய் அலுவலா்கள், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலா்கள் அவா்களின் செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

குமரி மாவட்டத்தில் இதுவரை பறவைக்காய்ச்சல் தொடா்பான எந்த பாதிப்பும் இல்லை. பறவைக் காய்ச்சல் வந்தாலும், அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா்ஆஷாஅஜித், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத்பிரைட், துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோராஜ், மாநகர நல அலுவலா் கின்சால், வட்டவிளை அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் உமா ராணி, அலுவலா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.