ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் அருகேயுள்ள நரையன்குளம் கிராமத்திற்குள் சுமார் 5 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை நாய் துரத்தி வந்துள்ளது. இதில் மிரண்டு ஓடிவந்த மான் கிராமத்தில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் மாடுகளுடன் நின்றுள்ளது. இதில் மானின் ஒரு கொம்பு தனியே வந்தது. உடைந்த இடத்தில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த கிராம பெரியவர்கள் முனியாண்டி, கிருஷ்ணன், முத்தையா, பாலமுருகன், கோவிந்தன், வைரமுத்து உள்ளிட்டோர் மானை பாதுகாப்பாக பிடித்து கட்டி வைத்து வனத்துறைக்கு தகவல் கொடுக்க ஏற்பாடு செய்தனர். கிராம இளைஞர்கள் தீவிர முயற்சி எடுத்து மானை பிடித்தனர்.