கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்வதற்காக, தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை ஒருநாள் பயிற்சி வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் உள்ள 8 குறுவளமையங்களில் நடைபெற்றது.

News image
Updated On :24 நவம்பர் 2012, 5:02 am

கோ.ஜெயக்குமார்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்வதற்காக, தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை ஒருநாள் பயிற்சி வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் உள்ள 8 குறுவளமையங்களில் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் என்றால் என்ன; சூழியல் சீர்கேட்டை தடுப்பதற்கான 13 சட்டங்கள்; புவி வெப்பமயமாதல் மற்றும் அதை தடுக்கும் முறை; நிலம், நீர், காற்று, ஒலி உள்ளிட்ட பல்வேறு வகை மாசுபடுதல்; சுற்றுச்சூழல் பயன்பாட்டில் மாணவர் பங்கு; பள்ளிகளில் எக்கோ கிளப் தோற்றுவித்தலின் அவசியம்; கதிரியக்க மாசுபடுதல்; அமில மழை; சமுத்திரத்தின் சீர்கேடு; சுற்றுப்புற சூழ்நிலை மாசு அடையாமல் பாதுகாக்க எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவது; சுற்றுச்சூழல் மாசு அடைவதால் ஏற்படும் விளைவுகள்; இனிமேல் நாம் செய்ய வேண்டிய கடமைகள்; சுற்றுச்சூழலை காக்க ஏற்படுத்துப்பட்டுள்ள தினங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அயன்கரிசல்குளம், மேலப்பாளையம் ஆகிய குறுவள மையங்களில் நடைபெற்ற பயிற்சியில் 105 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தம்பிபட்டி, மகாராஜபுரம், கூமாப்பட்டி, மேலகோபாலபுரம், துலுக்கபட்டி, சுந்தரபாண்டியம் ஆகிய 6 குறுவளமையங்களில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சியில் 211 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்களும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி தலைமையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.