கும்மிடிப்பூண்டி அருகே 1 டன் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் இருளர் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு நிலப்பகுதியில் கொட்டகை அமைத்து அதில் செம்மரங்கள் பதுக்கப்பட்டு உள்ளதாக பாதிரிவேடு போலீஸாருக்கு தகவல் வந்தது.இந்த


கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் பகுதியில் 1 டன் மதிப்புள்ள செம்மரங்களை பாதிரிவேடு போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் இருளர் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு நிலப்பகுதியில் கொட்டகை அமைத்து அதில் செம்மரங்கள் பதுக்கப்பட்டு உள்ளதாக பாதிரிவேடு போலீஸாருக்கு தகவல் வந்தது.இந்த தகவலின் பேரில் பாதிரிவேடு சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மாநெல்லூர் இருளர் காலனி பகுதிக்கு சென்று சோதனையிட்டார். இந்த சோதனையில் புதர் மண்டிய பகுதியில் கொட்டகை அமைக்கப்பட்டு அதில் செம்மரத்துண்டுகள் பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து செம்மரங்களை பறிமுதல் செய்த சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் செம்மரங்களை பதுக்கியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றார். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களின் மதிப்பு சுமார் 1 லட்சம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...