இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆரம்பாக்கத்தில் 1 டன் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் உட்பட போலீஸார் இரவு ரோந்துப் பணியில்

News image
Updated On :29 ஆகஸ்ட் 2013, 10:45 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 1 டன் மதிப்புள்ள செம்மர கட்டைகள் ஆரம்பாக்கம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் உட்பட போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஆரம்பாக்கம் பகுதியில் சர்வீஸ் சாலை வழியே சுரங்கப்பாதையில் லோடு வண்டி நின்றுக் கொண்டிருந்தது. அந்த லோடு வண்டியை போலீஸார் நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டபோது லோடு வண்டியில் இருந்து சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் வண்டியை நிறுத்தி ஓட்டம் பிடித்தார்.போலீஸார் வண்டியை சோதனையிட்ட போது வண்டியின் அடியில் செம்மரத் கட்டைகள் பதுக்கப்பட்டு அதன் மேல் தார்பாயும் அதன் மேலே தண்ணீர் பாக்கெட் மூட்டைகளும் அடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீஸார் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட அந்த லோடு வண்டியை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அந்த லோடு வண்டியில் 3 முதல் 7 அடி வரை 26 செம்மர கட்டைகள் இருந்தது. சுமார் 1 டன் எடையுள்ள அந்த செம்மர கட்டைகளின் மதிப்பு 1 லட்சத்திற்கு மேல் இருக்கலாம் என்றும் ஆரம்பாக்கம் அருகே ஆந்திர மாநிலம் இருப்பதால் ஆந்திர மாநில காடுகளில் இருந்து செம்மர கட்டைகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.