கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

போதிய நீரின்றி பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி காட்டுமன்னார்கோயில் பஸ் நிலையம் அருகே கடலூர்

News image
Updated On :7 பிப்ரவரி 2013, 1:10 pm

ஜி.சுந்தரராஜன்

போதிய நீரின்றி பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி காட்டுமன்னார்கோயில் பஸ் நிலையம் அருகே கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலையும், காட்டுமன்னார்கோயில் தாலுக்காவிலிருந்து காவிரி டெல்டா பாசன பகுதியிலிருந்து நீக்கப்பட்ட 38 கிராமங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக நிர்வாகிகள் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்து வட்டாட்சியர் தில்லைகோவிந்தனிடம் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.