கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடலோர காவல் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீஸார்: ஏடிஜிபி சைலேந்திரபாபு

கடலூர் காவல் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்படும் என தமிழக கடலோர காவல் படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

News image
Updated On :9 பிப்ரவரி 2013, 10:55 am

ஜி.சுந்தரராஜன்

கடலூர் காவல் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்படும் என தமிழக கடலோர காவல் படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையிலிருந்து கன்னியாக்குமரி வரை கடலோர காவல் படை சார்பில் ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையிலான குழுவினர் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். சைக்கிள் பயண பேரணி சனிக்கிழமை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தது. சிதம்பரம் வந்த சைக்கிள் பேரணியை ஏஎஸ்பி எம்.துரை, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் வரவேற்றனர்.

அப்போது ஏடிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடையே தெரிவித்தது: இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழக கடலோர காவல்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடலுக்கு செல்லும் மீனவர்களை பாதுகாக்கும் வகையிலும், கடலில் வழி தவறி செல்லும் மீனவர்களை மீட்கவும் சிறப்பு கமாண்டோ படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் 1093 என்ற இலவச மொபைல் எண்ணை அழைத்தால் போதும், அவர்களை ஹெலிகாப்டர் அல்லது சிறிய படகுகள் மூலமாகவோ கமாண்டோ படைகள் சென்று மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சைலேந்திரபாபு தெரிவித்தார். பின்னர் ஏடிஜிபி தலைமையிலான விழிப்புணர்வு சைக்கிள் பயண பேரணி நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.