சிதம்பரத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் வளையல் திருட்டு!
சிதம்பரம் நகரில் சாலையில் சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் மர்மஆசாமி ஒருவர் 2 பவுன் வளையல்களை திருடிச் சென்றார்.


சிதம்பரம் நகரில் சாலையில் சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் மர்மஆசாமி ஒருவர் 2 பவுன் வளையல்களை திருடிச் சென்றார்.
சிதம்பரம் மேலபுதுத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி ஐயங்கார் மனைவி சகுந்தலா (62). இவர் புதன்கிழமை மாலை அதே தெருவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த மர்மஆசாமி ஒருவர் மூதாட்டியிடம் கையில் பவுன் வளையலை போட்டுச் செல்லாதீர்கள். அதனை கழற்றி வைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி, அவரிடமிருந்த வளையலை கழற்றி பேப்பரில் பொட்டலம் மடித்து கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு தலைமறைவானார். மூதாட்டி சகுந்தலா வீட்டிற்கு வந்து பார்த்த போது அப்பொட்டலத்தில் வளையலை காணாமல் கற்கள் இருந்தது தெரிந்து அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து புகாரின் பேரில் சிதம்பரம் நகர குற்றப்பி்ரிவு போலீஸார் வழக்குப் பதிந்து வளையலை திருடிச் சென்ற மர்மஆசாமி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...