கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மதுவிலக்கை அமுல்படுத்த கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2013, 7:41 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞணி துணைத் தலைவர் ராஜாசம்பத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில சேவாதள கூடுதல் அமைப்பாளர் சரவணகுமார், அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னான் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர் குமார், பாரதியார் வங்கி இயக்குநர் துரை,பாலசந்தர்,மாவட்ட பங்சாயத்து ராஜ் தலைவர் குனக்குன்று,காங்கிரஸ் பேச்சாளர் மோகன்தாஸ், சந்திரசேகரன், இளங்கோ, பாலா, துரைமுருகன், டாக்டர் மஞ்சுளா, சந்தானமேரி, ஜனகம், மீனாசெல்வம், சுப்புலெக்ஷ்மி, கனகஜெயந்தி, ருக்குமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிதம்பரம் நாடாளுமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.