/

சிகரெட்டுக்கு பொங்கல் பரிசு: அன்புமணி கண்டனம்

புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புகைபிடித்தலால் கொலை செய்யப்படுகின்றனர்.இந்த நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிகரெட் வாங்கினால் தங்கக்காசு பரிசு என்ற விளம்பரத்துடன் தமிழர் பண்பாட்டை அவமானப்படுத்தும் அவலம் சென்னை நகரில் நடந்து

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:50 am

தினமணி

பொங்கல் பரிசு அளிப்பதாகக் கூறி சிகரெட் விற்பதற்கு பாமக இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புகைபிடித்தலால் கொலை செய்யப்படுகின்றனர்.இந்த நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிகரெட் வாங்கினால் தங்கக்காசு பரிசு என்ற விளம்பரத்துடன் தமிழர் பண்பாட்டை அவமானப்படுத்தும் அவலம் சென்னை நகரில் நடந்து வருகிறது.சிகரெட்டுடன் இலவசப் பரிசுகள் எதையும் அளிக்கக்கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைப் பொங்கல் பரிசாக அளிப்பது மிகக் கொடுமையான செயல்.

இந்த சட்டவிரோதச் செயலை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். கடைகளில் ஒட்டப்பட்டுள்ள இத்தகைய சிகரெட் விளம்பரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.