இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாணியம்பாடியில் 2 அம்மன் கோயில்களில் கொள்ளை முயற்சி.

வாணியம்பாடியில் 2 அóம்மன் கோயில்களின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நள்ளிரவில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூலை 2013, 5:41 pm

ராஜேஷ்

வாணியம்பாடியில் 2 அóம்மன் கோயில்களின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நள்ளிரவில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டையில் அழகுமாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்கள் அருகே அருகே அமைந்துள்ளது. வழக்கம் போல் வியாழக்கிழமை இரவு கோயில் பூசாரிகள் பூஜைகளை முடித்து பூட்டு விட்டு சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் அழகுமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் உண்டியலை உடைத்துள்ளனர். அதில் பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்தவர்கள் அருகில் உள்ள காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று மூலவர் அறையின் பூட்டை உடைக்க முயற்சி மேற்கொண்டு முடியாமல் போனதால் அப்படியே விட்டு சென்றனர். வெள்ளிக்கிழமை காலை சிலர் கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு வாணியம்பாடி நகர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாராணை செய்தனர். மேலும் வேலூரிலிருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர் ஆய்வாளர் செந்தாமரை வெள்ளிக்கிழமை மாலை அங்கு பதிவாகியுள்ள ரேகைகளை பதிவு செய்தார். கொள்ளை முயற்சி குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிந்து விசாராணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.