இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆந்திராவிற்கு கடத்த இருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திராவிற்கு சென்னையில் இருந்து காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள்

News image
Updated On :24 ஜூலை 2013, 9:51 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு மாருதி வேனில் கடத்த இருந்த 800கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி பறிமுதல் செய்தார்.

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திராவிற்கு சென்னையில் இருந்து காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையின் போது மாருதி வேன் ஒன்று அதிகாரிகளை பார்த்ததும் சற்று தொலைவில் நின்றது. தொடர்ந்து அதில் இருந்த டிரைவர் இறங்கி ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து அந்த வேனை பறிமுதல் செய்து அதனை சோதித்த போது வேனில் 17 சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த காரையும் பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசியும் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி ஒப்படைத்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.