ஆந்திராவிற்கு கடத்த இருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திராவிற்கு சென்னையில் இருந்து காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள்


கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு மாருதி வேனில் கடத்த இருந்த 800கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி பறிமுதல் செய்தார்.
கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திராவிற்கு சென்னையில் இருந்து காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையின் போது மாருதி வேன் ஒன்று அதிகாரிகளை பார்த்ததும் சற்று தொலைவில் நின்றது. தொடர்ந்து அதில் இருந்த டிரைவர் இறங்கி ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து அந்த வேனை பறிமுதல் செய்து அதனை சோதித்த போது வேனில் 17 சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த காரையும் பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசியும் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி ஒப்படைத்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...