கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இசைப் பல்கலைக்கழகம் தொடங்க முதல்வரிடம் கோரியுள்ளோம்: கலை, பண்பாட்டுதுறை இயக்குநர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் நடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 32-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியான ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.  இவ்விழா தொடர்ந்து மார்ச்.14-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :11 மார்ச் 2013, 6:37 am

ஜி.சுந்தரராஜன்

தமிழ்நாடு இசைக்கென தனி பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என முதல்வரிடம் கோரியுள்ளோம் என தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.எஸ்.ஜவகர் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் நடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 32-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியான ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.  இவ்விழா தொடர்ந்து மார்ச்.14-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

தொடக்கவிழாவிற்கு யு.ஆர்.உமாநாத தீட்சிதர் தலைமை வகித்தார். கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஏ.ஆனந்ததாண்டவ தீட்சிதர் முன்னிலை வகித்தார். நாட்டியாஞ்சலி கமிட்டி தலைவர் ஏ.கே.நடராஜன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாசார துறை ஆணையர் எஸ்.எஸ்.ஜவகர் நாட்டியாஞ்சலியை தொடங்கி வைத்துப் பேசினார்.

அவர் பேசியது: நமது கலை மற்றும் பண்பாட்டு நாட்டின் சொத்தாகும். உலக புகழ்பெற்றது சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில். சிதம்பரத்தின் அருமை, பெருமைகளை இங்குள்ள மக்கள் முதலில் உணர வேண்டும். தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆண்ட சோழர்கள் நடராஜர் கோயிலில் உள்ள சபாநாயகர் முன்புதான் பதவிஏற்பது வழக்கமாக இருந்துள்ளது. இக்கோயிலுக்குள் நுழைந்தாலே எதாவது ஒரு கலை உணர்வு நமக்கு வந்துவிடும். இங்கு நடராஜப் பெருமானுக்கு நான்கு கைகள் உள்ளது. ஒரு கையில் உடுக்கை வைத்துள்ளார்.  உடுக்கை சத்தத்தின் மூலம் அறியாமையை தட்டி எழுப்புகிறார். மற்றொரு கையில் அக்னி உள்ளது. அதாவது அறிவை தருகிறார். மூன்றாவது கையை கீழ்நோக்கி வைத்துள்ளார். அதாவது பூரண சரனாகதி அடைந்தால் குறை ஒன்று ஏற்படாது என்கிறார். நான்காவது கையில் அபயஹஸ்தம் வைத்துள்ளார். இதன் மூலம் அருள் கொடுக்கிறார். காலை தூக்கிக் கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் நடராஜர் இங்குதான் உள்ளார். இச்சிறப்பு வாய்ந்த நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி 5 நாட்கள் நடத்தப்படுகிறது. 9 நாட்கள் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள 1008 கோயில்களில் அடுத்த ஆண்டு மகாசிவராத்திரி விழா தமிழக முதல்வரின் அனுமதி பெற்று உபன்யாசம், இசை, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும் என எஸ்.எஸ் ஜவகர் தெரிவித்தார்.

விழாவில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தலைவர் பி.சுரேந்தர்மோகன் வாழ்த்துரையாற்றினார்.

அவர் பேசியது:  நாட்டியமாடுவது மிகவும் கஷ்டமானது. அதில் சிறப்பாக நாட்டியமாடுபவர்கள்தான் இங்கு நாட்டியம் ஆட முடியும். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இங்கு நடனமாடுவது பெருமையளிக்கிறது.  இந்த நாட்டியாஞ்சலி விழாவிற்கு என்எல்சி நிறுவனம் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. தொடர்ந்து உதவி அளித்து வருவோம் என பி.சுரேந்தர்மோகன் தெரிவித்தார்.

பிரேவியா கேப்பிட்டல் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் பாரத்பிஷ், யு.எஸ்.ஏ நியுயார்க் தமிழ்ச் சங்கம் தலைவர் பிரகாஷ் எம்.சுவாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். விழாவில் உதவிஆட்சியர்கள் எல்.சுப்பிரமணியன் (சிதம்பரம்), லலிதா (கடலூர்), நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர் வி.எஸ்.ராமலிங்கம், செயலாளர்கள் ஆர்.நாகசாமி, வழக்குரைஞர் ஏ.சம்பந்தம்,  இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாட்டியாஞ்சலியில் புதுச்சேரி தானியா கனக மகாலட்சுமி, மயிலாடுதுறை உமாமகேஸ்வரி, தஞ்சாவூர் சாருமதி சந்திரசேகரன், அண்ணாமலைப் பல்கலைக்கழக இசை மற்றும் நாட்டியத்துறை மாணவர்கள், யுஎஸ்ஏவைச் சேர்ந்த ஸ்வாதி பிசே, சென்னை கவிதாராமு ஆகியோரின் பரதம், ஹைதராபாத் மிகிராபாதுரி கூச்சுப்புடி நடனம், புதுதில்லி ரஞ்சனா கெளஹார் ஓடிஸி நடனம், பெங்களூரு ருக்குமணி விஜயகுமாரின் பரதம், சென்னை டாக்டர் வி.ராகவன் நிகழ்கலை மையம் வழங்கும் சிவ ஆனந்த யோகம் என்ற பரதம், யுஎஸ்ஏ மைதிலிகுமார், ரசிகா குமார், சென்னை சுதாராணி ரகுபதி மாணவியர் வழங்கும் கருத்தாண்டவர் என்ற பரதம், மஸ்கட்டைச் சேர்ந்த பத்மினி கிருஷ்ணமூர்த்தி, மும்பை பண்டிட் நரேஷ்பிள்ளை, சேலம் ரமாதேவி மாணவியர்கள், சென்னை கற்பகவல்லி ஜெயக்குமார், திருவனந்தபுரம் சஞ்சனாஅருண், சென்னை ராதிகா கல்யாணி, பெங்களூர் பூர்ணிமா நவீன்குமார், சென்னை நிருத்யதாரா மாணவியர்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாசிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய நாட்டியாஞ்சலியின் முதல்நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு முடிவுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.