ஆம்பூர் அடுத்த உமராபாத் அருகில் உள்ள பாவரதன்பட்டறை பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் சுப்பிரமணி. சுப்பிரமணி தனது இடத்தில் உள்ள கால்வாயை அடைத்தார். இதனால் கழிவுநீர் அன்பு வீட்டிற்குள் நுழைந்தது. இதனையடுத்து இரு வீட்டாருக்கும் தகராறு நடந்து வந்ததது. இந்நிலையில் இது தொடர்பாக மீண்டும் கடந்த 2010 ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மற்றும் அவரது மகன் ராஜ்குமார், மருமகன் சிவா ஆகிய மூவரும் சேர்ந்து அன்பு மற்றும் அவரது மகன் விமல்குமாரை கத்தியால் வெட்டினர். இதில் படுகாயமடைந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிóச்சை பெற்றனர்.