இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர்

News image
Updated On :12 டிசம்பர் 2014, 12:13 pm

கோ.ஜெயக்குமார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் சொத்து சேர்த்தகாக, லஞ்ச ஒழிப்பு போலீஸார் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 நீதிமன்றம் இந்த வழக்குகளை அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களே விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 28.11.14-ம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். மீண்டும் 12.12.14-ம் தேதிக்கு வாயிதா போடப்பட்டது. இதன்படி தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகினர். தங்களது குடும்பத்தினர் ஆஜராகாததற்கு ஒரு மனுவும், வழக்கின் ஆவணங்கள் கேட்டு ஒரு மனுவும் இவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், வழக்கு விசாரணையை 2015 ஜனவர் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.