இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு: ஒருவரிடம் விசாரணை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே நாளில் மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடு போயுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை ராஜபாளையம்

News image
Updated On :13 டிசம்பர் 2014, 12:11 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே நாளில் மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடு போயுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை ராஜபாளையம் போலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

சிவகாசி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தென்றல் நகரைச் சேர்ந்தவர் அ.அர்ஜூன் (20). இவர் சனிக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர்-திருவண்ணாமலைக்கு சுவாமி கும்பிட வந்துள்ளார். வாகனத்தை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு சுவாமி கும்பிட்டு வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. இது தொடர்பாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம், வீரப்பபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மா.முத்துச்சாமி (24). இவர் சனிக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் திருண்ணாமலை கோவிலுக்குச் சென்றுள்ளார். மலை அடிவாரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்து பார்த்த போது வாகனத்தைக் காணவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ராஜபாளையம் அருகேயுள்ள கிழவிகுளத்தைச் சேர்ந்தவர் பெ.அய்யனார் (32). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். கீழரதவீதியிலிருந்து ஆண்டாள் கோவிலுக்குச் செல்லும் பாதையில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சுவாமி கும்பிடச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வாகனத்தைக் காணவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். மூன்று புகார்களின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே ராஜபாளையம் குற்றப்பிரிவு போலீஸார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.