இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பசுக்களுடன் மறியலில் ஈடுபட முயன்றவர்களுடன் பேச்சு வார்த்தை: போராட்டம் வாபஸ்

விவசாயிகளிடம் வாங்கும் பாலை சட்டத்திற்கு முரணான அளவைகளில் அளந்து பெறும் கொள்முதல் செய்பவர்களைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில் வெள்ளிக்கிழமை கிராம மக்கள் தங்களது பசுக்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

News image
Updated On :19 டிசம்பர் 2014, 8:52 am

கோ.ஜெயக்குமார்

விவசாயிகளிடம் வாங்கும் பாலை சட்டத்திற்கு முரணான அளவைகளில் அளந்து பெறும் கொள்முதல் செய்பவர்களைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில் வெள்ளிக்கிழமை கிராம மக்கள் தங்களது பசுக்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட இருந்தவர்களுடன் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மம்சாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர், ஒத்தப்பட்டி, நரையன்குளம் கிராமங்களின் விவசாயிகளிடம் பாலை சட்டத்திற்கு முரணான அளவைகளில் அளந்து பால் கொள்முதல் செய்பவர்கள் பெற்று வந்துள்ளனர்.

மேலும் கறவைக் கூலி வாரத்திற்கு ரூ.100 மட்டுமே வழங்கப்பட்டு வந்தததாம். இக் குறைகளை நிவிர்த்தி செய்ய  வலியுறுத்தி, மம்சாபுரம்-காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் பசுக்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி காலையில் பசுக்களுடன் கிராம மக்கள் திரண்டனர்.

சம்பவ இடத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் சாந்தா, கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசன், மம்சாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் விரைந்து வந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பால் கொள்முதல் செய்வோரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு எட்டப்பட்டது. உடன்பாட்டின்படி, சரியான அல்லது சட்டப்படி முத்திரையிடப்பட்ட அளவைகளில் பால் அளந்து கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
பால் உற்பத்தியாளர்கள் தங்கள் மாடுகளிடம் கறக்கும் கறவைக் கூலியாக ரூ.90 வீதம் கூலியாகக் கொடுத்து வாங்கிக் கொள்வது என்றும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்முதல் செய்வோர் ஆகிய இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் இப் பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது. பேச்சு வார்த்தையில் ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் இ.முத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் க.இன்பவல்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.